இலங்கை சுங்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 87 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 140 பேட்டரிகள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் 51 இலட்சம் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

