மட்டக்களப்பில் 60.69 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது – ஜே. ஜே. முரளீதரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதுடன் 60.69 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சியும் அரசாங்க அதிபருமான திருமதி ஜே.ஜே. முரளீதரன் தெரிவித்தார்.

 

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 4 இலட்சத்து 55 ஆயிரத்து 520 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை 447 வாக்களிப்பு நிலையங்களில் அமைதியான முறையில் வாக்களித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *