யாழில் காணி பிரச்சனையில் ஒருவர் அடித்துக்கொலை; மூவர் தலைமறைவு

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த காணிப் பிணக்கு இன்று(16) கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற இந்த மோதலில், கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய செல்லத்துரை செல்வரஞ்சன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்த செல்வரஞ்சனுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையில் காணித் தகராறு நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது.

 

இன்று திங்கட்கிழமை மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இது முற்றிய நிலையில், மூன்று நபர்கள் இணைந்து செல்வரஞ்சன் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

 

தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

 

தாக்குதலை நடத்திய மூன்று நபர்களும் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

தாக்குதலாளிகள் மூவரும் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்ய கோப்பாய் காவல்துறையினர் விசேட சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *