நானாட்டான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் அரச காணி பிணக்குகள் தொடர்பாக விசேட பகுதி நாட்கூட்டம் இன்று(20) மாகாண காணி ஆணையாளர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அரச காணி உரிமை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ஆவணச் சீரமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்கும் நோக்கில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), நானாட்டான் பிரதேச செயலக செயலாளர் மற்றும் தொடர்புடைய துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

