வவுனியாவைச் சேர்ந்த இருவர் கஞ்சாவுடன் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கஞ்சாவினை இருவர் வாங்கிக்கொண்டு செல்லும் போது ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வைத்து வவுனியாவைச் சேர்ந்த இருவரை பொலிஸார் நேற்று(09) கைது செய்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து இரு நபர்கள் கஞ்சாவினை கொள்வனவு செய்வதற்காக புதுக்குடியிருப்பு நோக்கி வந்துள்ளார்கள். இவர்களுடன் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து வியாபாரிகள் டீல் பேசியுள்ளார்கள்.

இவர்கள் இரண்டு கிலோ வரையான கஞ்சாவினை எடுத்துக்கொண்டு மீண்டும் வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளை ஒட்டுசுட்டான் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து கற்சிலை மடுப்பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட இரண்டு கிலோ கஞ்சா மற்றம் சந்தேக நபர்கள் இருவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *