யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று சென் பிலிப் நேரிஸ் இளைஞர்களின் தவக்கால நூல் வெளியீடான கல்வாரிச்சுவடுகள் எனும் நூல் இன்றைய தினம் புனித வியாழன் திருப்பலியின் முன்னர் செம்பியன் பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் வெளியிடப்பட்டது.
குறித்த நூலில் திருச்சபையின் சடங்குகளின் முக்கிய சடங்கு வழியான சிலுவைப் பாதையின் பதினான்கு நிலைகளும் யேசுவின் கல்வாரிப்பயணத்தில் பங்காற்றிய முக்கிய நபர்களின் வாழ்வின் பின்னணியினை கொண்டதாக காணப்படுகிறது.
இந் நூல் வெளியீட்டில் செம்பியன்பற்று பங்கு மக்கள், இளைஞர்கள், அருட்சகோதரிகள் மற்றும் அருட்தந்தை புலோமின் ராஜா அன்பின் பணியாளர் சபை ஆகியோர் கலந்து கொண்டு பிரதிகளை வாங்கி சென் பிலிப் நேரிஸ் இளைஞர் யுவதிகளை வாழ்த்தி சென்றனர்.

