தர்மபுரத்தில் மோட்டார் சைக்கிளை திருடிய இருவர் கைது

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் உற்சவ கால பாதுகாப்பு நிலையத்தில் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளின் வயர்களை துண்டித்து மோட்டார் சைக்கிளை களவாடி கிளிநொச்சி வரை கொண்டு சென்றுள்ளனர்.

வீதியில் இடை நடுவே மோட்டார் சைக்கிள் இயங்க மறுத்த நிலையில் வீதியில் நின்ற சமயம் மோட்டார் சைக்கிளின் உரிமையாளரினால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக தர்மபுரம் பொலிஸாரால் விரைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் கிளிநொச்சி பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளும் மற்றும் 2 சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் கிளிநொச்சி  நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *