கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் இருமொழிமூலம் கல்வி கற்கும் மாணவர்களின் கல்விக் கண்காட்சியானது கணிதம்,விஞ்ஞானம், தொழிநுட்பப் பாடங்களை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. இந்நிகழ்வானது கல்லூரியின் அதிபர் அருட்.சகோ.ச.இ.றெஜினோல்ட் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலயத்தின் இருமொழிப்பிரிவு இணைப்பாளர் திருமதி சு.திருஞானசம்பந்தர் கலந்து கொண்டார்.
மேலும் பிரதி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் இக்கண்காட்சியை பார்வையிட்டனர்.

