வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று(13) இடம் பெற்றதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். நான்கு இளைஞர்களும் ஒன்றாக இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கடலலையில் அள்ளுண்டு சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வென்னப்புவ பொலிஸார், கடற்படையினரின் உதவியோடு நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சடலங்களாக மீட்கப்பட்ட மூவர் பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றுமொரு நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
உதயகுமார் ஸ்ரீதரன் 17 வயதுடையவரும், ஸ்ரீகாந்த் சரண் ராஜ் 19 வயதுடையவரும், ஸ்ரீகாந்த் அஜித் குமார் 18 வயதுடையவரும் மற்றும் யூசுப் 27 வயதுடையவர்களுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் ஸ்ரீகாந்த் சரண் ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித் குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் எனவும் உதயகுமார் ஸ்ரீதரன் உறவினர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நான்கு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வென்னப்புவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

