நாட்டின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை  

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 

மேலும், மாலை அல்லது இரவு நேரங்களில் நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீறறர் அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

 

வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *