யுத்தம் முடிந்து 16 வருடங்கள் ஆகின்ற நிலையில் அரசியல் கைதிகளை முழுமையாக விடுவிக்க வலியுறுத்தியும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகராசா ஜீவராசாவால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தை நோக்கி தர்மபுரம் பகுதியிலிருந்து ஊர்தி முன்னெடுக்கப்பட்டது.
இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவு நாள் வடக்கு கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த ஊர்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது.




