கிரான்குளம் பகுதியில் சம்மாந்துறை நோக்கிச் சென்ற டிப்பர் விபத்து

மட்டக்களப்பு –  கிரான்குளம் பகுதியில் இன்று(11) அதிகாலை சம்மாந்துறை நோக்கிச் சென்ற டிப்பர் விபத்து இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் சீமூன் ஹோட்டலுக்கு அருகாமையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
எம்பிலிப்பிட்டியவில் இருந்து பழங்களை ஏற்றிக்கொண்டு மட்டு கல்முனை பிரதான வீதி வழியே சம்மாந்துறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனமே கிரான்குளம் பகுதியால் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பயணிக்கும் போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டு வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்ற அதே வேளை வாகனம் பாரியளவான சேதத்தை எதிர்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *