இந்தியாவில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 956,639 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 59,755 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
அவர்களில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்து வந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 18,812 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் இருந்து 4,447 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதுடன், பிரித்தானியாவில் இருந்து 4,256 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
அத்துடன், சீனா, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *